2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரசேத்தில் விவசாயிகள் 75 பேருக்கு விவசாய உபகரணங்கள் திங்கட்கிழமை(26) வழங்கப்பட்டன.
உபகரணங்கள் வழங்கும் வைபவம்; கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 75 பேருக்கு மண்வெட்டி, கத்தி, போன்ற விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X