2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட அறிவுறுத்தல் கூட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட அறிவுறுத்தல் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) தேர்தல் தொகுதி ரீதியாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜெயச்சந்திரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், எஸ்.முரளிதரன், ஏ.சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்ப்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், காசுக்கான வேலை, சிறு குளங்களின் அபிவிருத்தி, கிராமியப்பாடசாலைகளின் அபிவிருத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட திட்டங்கள், கிழக்கின் உதயம், தேசத்துக்கு மகுடம், இந்திய வீடமைப்புத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X