2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மண்முனைப் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.

இதன் போது மண்முனைப் பற்று செயலாளர் பிரிவில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றி ஆராயப்பட்டது.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் அவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்முனைப் பற்று பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், கோவிந்தன் கருணாகரன்(ஜனா), பிரசன்னா இந்திரகுமார், எம்.நடராசா மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வாசுதேவன், மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X