2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முழுநாள் செயலமர்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு - வாழைச்சேனை  கிழக்கு சமூக அபிவிருத்தி பவுண்டேஷன் (ESDF) நிறுவனத்தின் ஏற்பாட்டில், காதிகள் மற்றும் மத்தியஸ்த சபையினருக்கான முழுநாள் செயலமர்வு ஒன்று வியாழக்கிழமை (11) நாவலடி ஹம்தான்ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் முஸ்லிம் சட்டம் ஒரு ஒப்பீட்டுநோக்கு, இலங்கையில் காதிநீதிமன்ற முறைமையும் பிரச்சினைகளை கையாள்வதில் சுயாதீனமான நீதியும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சம சந்தர்பங்களும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்ட ஏற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் செல்வி. ஆர். ராகுலநாயகி, வாகரைவாழைச்சேனை மற்றும் ஒட்டமாவடி மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் காதிமார்கள் கலந்து கொண்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X