2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தாதிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

மை ஹோப் நிறுவனத்தின் இணை நிறுவனமான சர்வதேச தொழிற் பயிற்சிக் கல்லூரி ஐவா தாதியர் கல்லூரியின் மட்டக்களப்பு மற்றும் வவுனியா நிலையங்களில் பயிற்சியினை பூர்த்தி செய்த தாதிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் சத்தியப்பிரமானமும் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மை ஹோப் மற்றும் ஐவா தாதியர் கல்லூரியினதும் முகாமைத்துவப் பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜனாதிபதி ஆலோசகர் சிவநேசதுறை சந்திரகாந்தன் ஆகியோரும் கௌரவ அதிதியாக சத்திரசிகிச்சை நிபூணர் வைத்திய கலாநிதி சித்தீக் ஜெமீல் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் 100 மாணவர்கள் பட்டம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர் தெரிவித்தார்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X