2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திக் குழுக் கூட்டம்

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல்(19) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில்  நடைபெற்றது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இவ்வருடம் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப் படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும்  கலந்துரையாடப்பட்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இவ்வருடம் கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபாவும், கிராமிய பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திற்கென 2.830 மில்லியன் ரூபாவும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் 3.625 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.

மேலும் விசேட திட்டத்தின் கீழ் 5.05 மில்லியன் ரூபாவும், திவிநெகும திட்டத்தின்கீழ் 9.440 மில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப் படுத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் 2.473 மில்லியன் ரூபாவும், ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிருத்திக்குழுத் தலைவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார், மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஷ்ணபிள்ளை,   இரா.துரைரெட்ணம், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், உட்பட ஏனைய திணைக்களத் தலைவர்கள், கிராமசேவை உத்தியோகஸ்தர்கள்,  பொலிஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X