2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகைகள் நிறுவனத்துக்கு முன்னாள் உள்ள வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று, வீதி நிர்மாண வேலைகளுக்கு பயன்படுத்தும் வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X