2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழிற்சந்தை ஆரம்பிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (23) காலை தொழிற்சந்தையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தால் இந்த தொழிற்சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா,  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படித்துவிட்டு தொழிலின்றியுள்ள  இளைஞர், யுவதிகள், மாவட்டத்தில் இயங்கும் பிரபல தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வருடாந்த தொழிற்;சந்தையாக இது இடம்பெறுவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X