2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழரசுக் கட்சின் புதிய நிர்வாகத்தினரை வரவேற்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல்-சக்திவேல், எஸ். பாக்கியநாதன்


இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பில்  இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அக்கட்சியின் அரசியல் குழு  தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கட்சியின் புதிய செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம் ஆகியோருக்க பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இவர்கள் மூவரும், மட்டக்களப்பு கல்லடி மணிக் கூட்டு கோபுரத்துக்கு முன்னாலிருந்து மலர் மாலை அணிவித்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலங்கைத் தழிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வானது அதன் தலைவர் கி.சேயோனின் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, மற்றும் பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
 
]


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X