2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் பலி

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் உள்ள சுங்கான்கேணியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண், இன்று சனிக்கிழமை (11) மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் சின்ன வேம்பு கிராமத்தைச் சேர்ந்த நாதன் யோகேஸ்வரி (வயது 49) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை சுங்கான்கேணி பிரதான வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதியதில்  இவர் தலையில் அடிபட்டு வீதியில் விழுந்துள்ளார்.

இவர், உடனடியாக  வாழைச்சேனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று மரணமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இவ்விபத்து குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X