2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வல்லப்பட்டை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று திங்கட்கிழமை  (27) கைதுசெய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து 300,000 ரூபாய் பெறுமதியான 117 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய  வல்லப்பட்டையை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்தச் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது கைதுசெய்யப்பட்டார்.

வல்லப்பட்டையுடன் சந்தேக நபரை  மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்றையதினம் (27) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X