2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட். செயலகத்தினால் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Gavitha   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்,எஸ்.பாக்கியநாதன்

கொஸ்லாந்த மீரியாபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நிவாரணங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற கூட்டத்தில் இத்திர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட செயலக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நடவடிக்கையின் முதல் கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, பொது மக்களும் நலன் விரும்பிகளும் வர்த்தகர்களும் தங்களால் இயன்ற பணம், உடுதுணிகள், உலர் உணவுப் பொருள்கள், பாடசாலை உபகரணங்கள், பாடசாலை சீருடைகள் உள்ளிட்ட பொருள்களையும் கையளிக்கலாம்.

மேலும், நிவாரணப் பொருள்களை மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவில் நாளை வெள்ளிக்கழமை (31) காலை 10 மணிமுதல் முதல்; சனிக்கிழமை மாலை 6 மணி வரை பொருட்களை கையளிக்கலாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X