2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் கார் சேதம்

Thipaan   / 2014 நவம்பர் 08 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில், நேற்று (07) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் கார் ஒன்று சேதமாகியுள்ளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றுடன் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று மோதுண்டதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதுண்ட காரின் இடதுபகுதி,  ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள வடிகானுக்குள் இறங்கியதால் காருக்கு சேதமேற்பட்டது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X