2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறையைச் சேர்ந்த கணேசன்-லிங்கநாதன்  (வயது 48) என்பவரே விபத்தில் காயமடைந்தவராவார்.

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த வான், வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை  மோதிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X