Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள் நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு முறையாக வரி செலுத்தி வரும் 17 பேருக்கு சிறப்புரிமை அட்டைகள் இன்று சனிக்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வைபவம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிராந்திய பணிமணையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த வைபவம்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிராந்திய உதவி ஆணையாளர் எம்.கணேசராசா தலைமையில் நடைபெற்றது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி கல்யாணி தஹாநாயக்கா, மற்றும் உதவி ஆணையாளர் எஸ்.அபேசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் உட்பட அதிகாரிகள், திணைக்கள தலைவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், வரியிறுப்பாளர்கள் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது 2013, 2014ஆம் ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக தவணை முறைப்படி வரி செலுத்தியவர்களில் 7 பேர் தங்க சிறப்புரிமை அட்டைகளும் 12 பேர் வெள்ளி சிறப்புரிமை அட்டைகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
19 minute ago