Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
நாங்கள் இந்த அரசாங்கத்துடன் முழுமையாக இணையவில்லை. நாங்கள் கேட்டதை இந்த அரசாங்கம் முழுமையாகத் செய்து தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 49ஆவது வருடாந்த விளையாட்டு விழா, களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை(18) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். நாங்கள் 65 வருடங்களாக தமிழ் மக்களுக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தில் வழுக்குமரத்தில் ஏறுவது போன்று ஏறுவதும் இறங்குவதுமான நிலையில் காணப்படுகின்றோம்.
எங்களது இலக்கினை அடையும் வரை நாங்கள் இந்த பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருப்போம். உரிமைக்கான போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் நாங்கள் ஆகுதியாக்கி இருக்கின்றோம். விடுதலைப் போராட்டத்தின் போது மூன்று இனமக்களும் இந்த மண்ணிலே இறந்துள்ளார்கள் என கூறுகின்றனர்.
அவர்களுக்கு நான் கூறுவது யாதெனில், இலட்சக்கணக்கான மக்களை இழந்த இனம் என்றால் எமது தமிழினம் மாத்திரம்தான். எனவே விடுதலைப் போராட்டத்தில் பாரிய உயிர்ச்சேதத்தினை சந்தித்தவர்கள் தமிழர்கள்தான். இவ்வாறான இழப்பினூடாகத்தான் தற்போது அரசியலை நாங்கள் செய்துகொண்டு இருக்கின்றோம்.
தற்பொழுது ஒரு ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. இந்த அட்சி மாற்றத்தின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளது. இதனால் எதனையும் சாதிக்க முடிந்துள்ளதா எனக் கேள்வியெழுப்புகின்றனர்.
நாங்கள் இந்த ஆட்சியை மாற்றியுள்ளோம். இதற்காக நாங்கள் கேட்ட விடயங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய விடயங்களையே எங்களுக்கு இந்த அரசாங்கம் செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் என நாங்கள் கேட்டிருந்தோம். இதுவரையான காலப்பகுதியில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இந்த அரசாங்கம் செய்ததாக கூறுவது யாதெனில் வட மாகாணத்திலுள்ள 540 ஏக்கர் நிலத்தினை விடுவிப்பதாக கூறி, அதனை மக்கள் பார்வையிட அனுமதித்துள்ளனர்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் அடாவடித்தனமாக மேச்சல் தரைக்காக பிடிக்கப்பட்ட காணிகளை தற்பொழுது பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலினை எமது கட்சி தலைவர் ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்க இருக்கின்றோம்.
இவ்வாறான சில விடயங்கள் நடந்தாலும் கூட இந்த அரசாங்கத்தின் மீது சில விடயங்களில் நம்பிக்கைக் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் இதனை அவர்கள் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.
தமிழ் மக்கள் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள வேண்டும். இலக்கை எட்டும் வரைக்கும் நாங்கள் நாங்களாகத்தான் இருக்க வேண்டும். இதற்காக தொடர்சியாக எமது அரசியல் பலத்தினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
18 minute ago