2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாக்குதலுக்குள்ளான ஏறாவூர் நகரசபை உறுப்பினர், வைத்தியசாலையில் அனுமதி

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தாக்குதலுக்குள்ளான ஏறாவூர் நகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நகரசபையில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெறவிருந்த நிகழ்வொன்றுக்காக சென்றிருந்தபோது, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமீன் இஸ்ஸத் ஆஸாத், ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அதன்பின்னர் அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏறாவூர் நகரசபை ஊழியரான அலிமுஹம்மத் பைஸல் என்பவரும் சரிபுத்தம்பி புஹாரி என்பவருமே தன்னைத் தாக்கியதாக, ஆஸாத் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவர்கள் இருவரும் முன்னாள் ஏறாவூர் நகர பிதாவும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் ஆஸாத் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .