2025 ஜூலை 09, புதன்கிழமை

வெசாக் காலத்தில் மது விற்பனை செய்த 20 பேர் கைது

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெசாக் தினத்தையொட்டி  மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த மற்றும் சட்ட விரோதமாக  மதுபானங்கள் வைத்திருந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  பெருமளவான மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இலங்கை மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.கே.ஜி.குணவர்த்தனவின் பணிப்புரைக்கமைய மதுவரித்திணைக்களத்தின் குற்றப்பிரிவு ஆணையாளர் டி.மல்லவ நேரடியாக மட்டக்களப்புக்கு வருகைதந்து இதற்கான பணியை வழி நடத்தியிருந்தார்.

மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய உதவி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டாரவின் ஆலோசனையின் கீழ், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அத்தியட்சகர் என்.சோதிநாதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இது தொடர்பான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான், சுங்காகேணி ஆகிய பகுதிகளிலும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தை பகுதியிலும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை, ஆரையம்பதி, நாவற்குடா, கிரான்குளம் ஆகிய பகுதிகளிலும் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியிலும் இவ்வாறான சட்ட விரோத மதுபான நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்கீழ் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 20 லீற்றர் கசிப்பு வடிசாராயமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வெசாக் வாரத்தில் மதுபான விற்பனைகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 20பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை 07ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .