2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சைக்கிளில் வந்துகொண்டிருந்த வந்தாறுமூலையைச் சேர்ந்த அன்பழகன் வினோத் (வயது 28) என்பவரே விபத்தில்  படுகாயமடைந்துள்ளார்.

வேகமாக வந்து இவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக  செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், இதன் பின்னர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .