2025 மே 17, சனிக்கிழமை

உழவு இயந்திரம் மோதி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கொம்மாதுறை பகுதியில்  உழவு இயந்திரம் மோதியதால் படுகாயமடைந்த  இளைஞர் ஒருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலையைச் சேர்ந்த அன்பழகன் வினோத் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொம்மாதுறை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த  இந்த இளைஞரை வேகமாக வந்த உழவு இயந்திரம் மோதியுள்ளது.

இந்த நிலையில், உடனடியாக  செங்கலடி பிரதேச வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞர், பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த விபத்தை தொடர்ந்து  உழவு இயந்திரத்துடன் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில், அவரை கைதுசெய்வதற்காக  ஏறாவூர் பொலிஸார் தேடிவருகின்றனர். அத்துடன், இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .