Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 19 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் திருகோணமலை சம்பூர் அகதி மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கிழக்கு மாகாணம் தழுவிய மாணவர் பகிஷ்கரிப்புக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'யுத்தம் முடிவடைந்து பல வருடங்களானபோதிலும், படுகொலைகளும் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அகதி வாழ்க்கையும் முடிவின்றித் தொடர்கின்றது. படுகொலைகளும் பெண்கள், சிறுவர்கள், மாணவர்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்' என்றார்.
'படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு நீதி விசாரணை வேண்டும். முடிவின்றித் தொடரும் சம்பூர் மக்களின் அகதி வாழ்க்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்,
சம்பூர் பிரதேசத்திலுள்ள 3 பாடசாலைகள் உடனடியாக அந்தப் பிரதேச மாணவர்களின் கல்வி நலனுக்காக படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் அந்தப் பிரதேச மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு இன, மத பேதம் இன்றி கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், திருகோணமலை சிவில் சமூகம் என்பன ஆதரவளித்துள்ளன' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago