2025 மே 17, சனிக்கிழமை

உழவு இயந்திரப்பெட்டி விழுந்து இளைஞன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள விபத்தில் வந்தாறுமூலை எல்லை வீதியைச் சேர்ந்த இளையதம்பி திலகராஜ் (வயது 26) உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை -உப்போடை வீதியில் உழவு இயந்திரத்தில்  ஏற்றப்பட்ட ஆற்று மணலை  பறித்துக்கொண்டிருந்த வேளையில், உழவு இயந்திரப்பெட்டி  சடுதியாக கீழிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது,   உழவு இயந்திரப்பெட்டிக்கு கீழ் நின்றுகொண்டிருந்த  தொழிலாளியான  இந்த  இளைஞனின் தலையில் பெட்டி விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த இந்த இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், உழவு இயந்திரத்தின்  சாரதியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .