Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 27 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுள் ஒன்றான வாகரை மகா வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை (26) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, லண்டன் கனக தூர்க்கை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் அனுசரணை மூலம் பெற்ற அப்பியாசக் கொப்பிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர், பேரவை பிரதி நிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், லண்டன் கனக தூர்க்கை அம்மன் ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago