2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாசிக்குடா கடலில் நீராடியவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 04 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில்  நேற்று புதன்கிழமை மாலை நீராடிக்கொண்டிருந்த எஸ்.ரீ.துஸான் துலன்ஜய (வயது – 23) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல, கனாதென்ன பிரதேசத்திலிருந்து பஸ் வண்டியில் 33 பேர்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாசிக்குடாவுக்கும் வந்தனர். இந்த நிலையில், இவர்  பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .