Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
பொதுமக்களின் பங்களிப்புடன் பாதை திருத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்தில் சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை, ஒக்ஸ்பாம், நிறுவனத்தின் அனுசரணையுடன்; மேற்கொள்ளப்படும் காசுக்கான வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வீதியை தாங்களே புனரமைப்பதற்கும்; நீர் வழிந்தோடும் வடிகான்களை வெட்டுவதற்கும் உரிய சந்தர்ப்பத்தை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகளும் பிரதேச சபை அதிகாரிகளும் இணைந்து காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளனர்.
இக்கிராமத்து மக்கள் மழைக்காலங்களில்; வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுள் முக்கியமானது போக்குவரத்து சீரழிந்து போவது. இவர்களுக்கான பிரதான போக்குவரத்து வீதி ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்குவதும் சேதமுறுவதும் வழக்கம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago