2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாண தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

அவர் நேற்று சனிக்கிழமை (06) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் அதிகாரிகள் மீதான  திட்டமிட்ட அடக்குமுறைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் அதிகாரிகளை மாகாணசபையில் உயர்பீடங்களுக்கு கொண்டுசெல்வதற்கு கடந்த காலங்களில் பல தடைகள் இருந்தும்,  அவற்றை  தாண்டி எமது தலைவர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை  முதலமைச்சராக இருந்த காலத்தில் அன்றைய மாகாணசபையின் உதவியுடன் சிரமத்தின் மத்தியில் பல தமிழ் அதிகாரிகள் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையிலிருந்து உள்வாங்கப்பட்டிருந்தனர்.

அதுமட்டுமன்;றி, பல தகைமைகளோடு உரிய இடம் கிடைக்காமல் இருந்த தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாணசபையின் உதயத்தின் பின்னரே உரிய பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெற்றன. ஆனால், தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண உயர் பதவிகளில் இருக்கும் தமிழ் அதிகாரிகள் பழி தீர்க்கப்படுகின்றனர். இந்நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்

திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திடீர் அதிகாரிகள் இடமாற்றம், பதவிக் குறைப்புக்கள் ஏனைய அதிகாரிகள் மத்தியில் இன முரண்பாட்டையும் ஓர் அதிகாரியை இன்னும் ஓர் அதிகாரி இனக்குரோத சந்தேகத்துடன் பார்க்கும் நிலைமையினையும் தோற்றுவித்துவிடும். எனவே, மூவினங்களும் இணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் முன்னுதாரணமாக மாகாணசபை செயற்பட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X