2025 மே 16, வெள்ளிக்கிழமை

எரிகாயமடைந்த பெண் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் 5ஆம் குறிச்சியிலுள்ள வீடொன்றில் எரிந்துகொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீப்பற்றியதால், அவ்வீட்டிலுள்ள பாலேஸ்வரன் ரசிகலா (வயது 35) என்பவர் எரிகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது வீட்டில் நேற்று வியாழக்கிழமை இரவு  எரிந்துகொண்டிருந்த  மண்ணெண்ணெய் விளக்கு திடீரென்று கவிழ்ந்ததால்,  இவரது  ஆடையில்  தீப்பற்றிக்கொண்டதில் இவர் எரிகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .