2025 மே 16, வெள்ளிக்கிழமை

சின்னத்தோனாவை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 22 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் பால்வாத்த ஓடை எனப்படும் சின்னத்தோனா புனரமைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராஜ் தெரிவித்தார்.

இந்த சின்னத்தோனா கால்வாய் புனரமைப்பு தொடர்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய   அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இதற்காக 9 இலட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாரி காலத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளம் வடிந்தோடும் வகையில் இந்த பால்வாத்த ஓடை புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .