2025 மே 16, வெள்ளிக்கிழமை

யோகாப் பயிற்சி நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாப் பயிற்சி நிகழ்வு, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பயிற்சிகளை யோகா நிபுணர் செல்லையா துரையப்பா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயிற்சிகளுக்கான செய்முறைகளையும் பயிற்சியினால் ஏற்படும் அனுகூலங்களையும் தெளிவு படுத்தினார்.

யோகா கலையின் சிறப்பம்சங்களை உலகுக்கு வெளிப்படுத்திய 18 ரிஷிகளையும் நினைவு கூர்ந்து 18 சிட்டி விளக்குகள் பயிற்சிபெறுவோரினால் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய போதனாசிரியர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ரவீந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .