2025 மே 16, வெள்ளிக்கிழமை

மதிதயான் கொலைச் சந்தேகத்தில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 22 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த சச்சிதானந்தம் மதிதயான் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு, மண்டூரில்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் மேலும் கூறினர்.

முன்னதாக பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின்  முன்னாள் உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மற்றைய இருவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .