2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுதாவளை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து தொண்டர் ஆசிரியர்கள்  காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக களுவாஞ்சிக்குடியிலிருந்து திருகோணமலைக்கு, மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வான் மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது  படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  இருவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளனர். மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .