2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் பொதுதேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அலுவலக நடவடிக்கைககள் வெள்ளிக்கிழமை (03) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும், வெள்ளிக்கிழமை (03) இரண்டு மணிவரை, இரு சுயேற்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல்கள்; செயலகம் தெரிவித்தது.

மேலும், வாக்குப்பெட்டிகள் திருத்தியமைக்கும் பணிகளும் இடம் பெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 365,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல்கள்; ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 172,499 பேரும் கல்குடா தொகுதியில் 105,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, இம்மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில் 115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .