2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் ஆசிரியை மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 06 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால்,  ஆசிரியை ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான முஹம்மது இஸ்மாயில் ஹைரியா (வயது – 45) என்பவரே மரணமடைந்துள்ளார். இவர் முஹம்மது இஸ்மாயில் ஹைரியா செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் கற்பிப்பவர் ஆவார்.

இந்த ஆசிரியை தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மட்டக்களப்புக்கு சென்றுவிட்டு; மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியூடாக  முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது, வழியில் மாடொன்று  குறுக்கறுத்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆசிரியையும் அவரது கணவரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆசிரியை மரணமடைந்துள்ளார். ஆசிரியரான இவரது கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த விபத்து தொடர்பில் பொலஸார் விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .