2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே தமிழ் தேசியத்தை பலப்படுத்த முடியும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சி.வியாளேந்திரன் தெரிவித்தார்.

வாகரை, பால்சேனையில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரசாரகூட்டத்தின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாங்கள் அரசியல் ரீதியான விழிப்படைந்த சமூதாயமாக மாற்றம் பெறவேண்டும்.எமக்குள் உள்ள உணர்வுகளை அரசியல் மூலம் அடைவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறான நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் கல்வி ,பொருளாதார ரீதியான கட்டமைப்புகள் வளர்க்கப்படவேண்டும். எனவே,எதரிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்வதன் மூலம் அந்த நகர்வினை கொண்டுசெல்ல முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .