2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

21/4 தாக்குதல்; 50 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 50 பேரையும்  எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல்,  நேற்று (02) உத்தரவிட்டார்.

இவர்கள் அனைவரும் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள், சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தனர் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X