2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

25 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 25 பெண்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் இயந்திரங்கள்  ஞாயிற்றுக்கிழமை (28) வழங்கப்பட்டன.

மேலும், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கணினிப் பயிற்சி மற்றும் தொழில் பயிற்சிகளை முடித்த பெண்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு நடத்திய முப்பெரும் விழாவின்போதே, தையல் இயந்திரங்களும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.

தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த பெண்களின் சுயதொழில் உற்பத்திப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்;,  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான  சல்மா ஹம்சா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் உத்தியோகஸ்தர் நௌசாட் ஏ.ஜப்பார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஒரு வருடமாக இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா தூதுவராலயத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, வவுணதீவு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை  கட்டியெழுப்புவதற்காக பல்வேறு தொழிற்பயிற்சிகள், தலைமைத்துவம்,  சுகாதாரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X