Gavitha / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 225 கிராம சேவையாளர் பிரிவுகளில், 88,925 குடும்பங்களைச் சேர்ந்த 322,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் குறித்த மாவட்டத்தில், 7,794 குடும்பங்களைச் சேர்ந்த 27,608 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள், மாவட்டத்தின் ஆங்காங்கே காணப்படுகின்ற பொதுக்கட்டிடங்களில், 78 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றைவிட 31,431 குடும்பங்களைச் சேர்ந்த 113,776 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உரிய பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ள அனர்த்தம் காரணமாக, இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 32,299 குடும்பங்களைச் சேர்ந்த 63,978 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago