2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

7 வயது சிறுமி துஷ்பிரயோகம்

Freelancer   / 2021 ஜூன் 15 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14,  வயதுடைய இரு சிறுவர்களை நேற்று (14) இரவு  கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை குறித்த சிறுமியின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில், குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இருசிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறிமியை பாலியல் பலத்காரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதனையடுத்து குறித்த இரு சிறுவர்களையும் பொலிசார் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருதாகவும் தெரிவித்தனர்.

M

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .