2025 மே 02, வெள்ளிக்கிழமை

'9,200 ஹெக்டயர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரையாக அடையாளம்'

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,200 ஹெக்டயர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண காணி பயன்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.நஜீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை நிலங்களை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைபெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இதில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து பகுதிகளும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு பகுதிகளும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு பகுதிகளும் வெல்லாவளி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பகுதியும் இதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

மேய்ச்சல் தரை நிலங்களை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டத்தில் காணி பயன்பாட்டுக்குழு உத்தியோகத்தர்கள், கால்நடை வைத்திய அதிகாரிகள், வன இலாகா அதிகாரிகள், பால் சேகரிப்பு நிலையங்களின் உத்தியேகாத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இதில் மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 9,200 ஹெக்ரயர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனது தலைமையிலான குழுவைத்தவிர இன்னுமொரு குழு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மேய்ச்சல் தரை நிலங்களை அடையாளப்படுத்தியுள்ளன. அதன் அறிக்கை இன்னும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X