Suganthini Ratnam / 2016 ஜூலை 01 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில்; ஆரம்பப் பிரிவுக்கு கட்டடம் அமைப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
கல்வி அமைச்சின் 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த ஆரம்பப் பிரிவு கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அதிதிகளாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


24 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
9 hours ago