Niroshini / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
“ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும், இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை, சிறையில் வாடும் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, தென்பகுதியை திருப்திப்படக்கூடிய அளவுக்குத்தான் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன இந்நிலையில், இந்த அரசாங்கத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
களுதாவளை கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (29) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பொது நிகழ்வுகளை நடத்தக்கூடிய சூழல் இருக்கவில்லலை, எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசங்கள் சுயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறக்கூடிய முறையாக மைதான ஒழுங்குகள் உள்ளிட்ட வசதி வாயப்புக்கள் இல்லை. இவ்வாறான நிலையிலும்கூட களுதாவளையைச் சேர்ந்த ரிசானன் இரண்டு, தங்கப் பதக்கங்களை தேசிய மட்டத்தில் வென்றெடுத்துள்ளான். எதிர்காலத்தில் முறையான பயிற்சிகள், மைதான ஒழுங்குகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் பல மாணவர்கள் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கங்களைப் பெறுவதோடு மாத்திரமல்ல, சர்வதேச மட்டத்தில் போட்டி இடும் நிலைமை உருவாகும்.
இணைந்த வட - கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்று ஒரு சுயாட்சியுடன் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வடக்கு - கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து மாற்றியுள்ளோம்.
2015இற்கு முன்னர் வட - கிழக்கை அபிவிருத்தி செய்யவதற்காக வெளிநாடுகள் கொடுத்த பணங்கள் அனைத்தும் தெற்கில் அபிவிருத்திக்காக மாற்றப்பட்டிருந்தன. இந்நிலைமை தற்போது மாற்றம் பெற்று எமது பிரதேசங்களும் அபிவிருத்தி காண வேண்டும் என்ற நோக்குடன்தான் இந்த புதிய ஆட்சியை நாம் கொண்டு வந்துள்ளோம்.
தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஓர் அரசியல் சபையாக மாற்றி பழைய தேர்தல் முறையைக் கொண்டுவருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்தல், புரையோடிப் போயுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் போன்ற மூன்று விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது என்றார்.
இலங்கையின் பெயரை சர்வதேச மட்டத்தில் நற்பெயர் வாங்குவதற்கும், ஜி.எஸ்.பி. பிளஸ் போன்றவற்றை பெற்றெடுக்கும் நோக்குடன்தான் இந்த அரசாங்கம் செயற்படுகின்றதே தவிர அரசியல் தீர்வுக்காண செயற்பாடுகள் ஒன்றையும் இந்த அரசாங்கத்திடம் காணவில்லை.
மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு இந்தியா எவ்வளவோ முயற்சி எடுத்தாலும், இலங்கை அரசாங்கம் அதற்குத் தடை போடுகின்றது. இவ்வாறு பாலம் அமைந்தால் அதனை நான் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகின்றார். அவர் எப்படியான பயங்கரவாதியாக இருக்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த நாடு நாலா பக்கமும் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தல், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தரை வழிப்பாதை ஒன்று ஏற்பட வேண்டும். இவ்வாறு அது ஏற்பட்டால் ஐரோப்பா வரைக்கும் தரை வழிப்பாதயூடாகச் செல்லலாம் எனவும் குறிப்பிட்டார்.
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago