Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கை முறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளுக்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று (21) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் உரையாற்றுகையில்,
மனித உடலுக்கு எவ்வித போஷாக்கையும் வழங்காது பசிக்கின்ற வயிற்றை மட்டும் நிரப்பக்கூடிய துரித உணவுகளுக்கு இலங்கையின் இன்றைய இளம் சமுதாயம் அடிமைப்பட்டுள்ளது.இதன்விளைவாக மறைமுகமாக உருவாகிவரும் உடல், உள நலமற்ற எதிர்கால சந்ததியைக் கொண்ட ஒரு பரிதாபத்துக்குரிய இலங்கை தேசம் என்ற பாதிப்புமிக்க நிலையை அடியோடு இல்லாதொழிக்கும் நோக்குடனேயே சுதேச மருத்துவ அமைச்சினால் இவ்வேலைத் திட்டம் முன்மொழியப்பட்டு இலங்கை முழுவதிலுமுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்து குறித்த வேலைத்திட்டத்தில் தமது மகளிர் அபிவிருத்திப் பிரிவின் பங்களிப்புகள் குறித்து மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பங்கு தொடர்பாக சிரேஷ்ட பொதுச்சுகாதார மருத்துவமானது திருமதி.ரி.கணேசமூர்த்தியும் கிராம உத்தியோகத்தர்களது செயற்பாடுகள் தொடர்பாக கிராம உத்தியோகத்தர் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டரும் உரை நிகழ்த்தினர்.
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
அரசின் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் தாபிக்கப்பட்டுள்ள போஷாக்கு மேம்பாட்டுக்கான கிராம மட்ட செயற்பாட்டுக் குழுக்களில் அங்கம் வகிக்கும் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை இங்கு மிக முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.
அவர்களின் சிறப்பான சேவைகளைத் தமது கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி எதிர்காலத்தில் இதன் பெறுபேறுகளை நேர்ப் பெறுமானங்களில் அடைந்துகொள்வதற்கான ஆதரவு ஒவ்வொரு கிராம மட்ட தன்னார்வக்குழு அங்கத்தவர்களிடமிருந்தும் கிடைக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago