2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

உயர் தரப் பரீட்சை எழுதும் இரு மாணவர்களுக்கு டெங்கு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வந்த மாணவர்கள் இருவர், டெங்குக் காயச்சலால் பீடிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை மற்றும் ஓட்டமாவடி பாத்திமா மகளிர் மகா வித்தியாலய மாணவர்களே டெங்குக் காய்ச்சல் காரணமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சையை எதிர்நோக்கி வருவதோடு, இம்மாணவன் க.பொ.த சாதரண தரப் பரீட்சையில், அனைத்துப் பாடங்களிலும் 9ஏ பெறுபேறு பெற்று, சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .