2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஏறாவூர் இரட்டைக் கொலை; அறுவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 06 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இச்சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே, அவர் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி  மீட்கப்பட்டன. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்படி 6 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு, இன்று புதன்கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையிலேயே, இவர்களுக்கான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட வேளை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X