2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நகர வீதி புனரமைப்பு; அடையாளமிடப்பட்ட கட்டடங்களை அகற்றும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜூலை 12 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் நகர பிரதான வீதி புனரமைக்கப்படவுள்ள நிலையில், அந்த வீதியை அகலப்படுத்தும் பணிக்காக அடையாளம் இடப்பட்ட கட்டடங்களை அகற்றும் நடவடிக்கை, தற்போது இடம்பெற்று வருகின்றது என,  நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலையை அகலமாக்கும் பணிக்காக  அடையாளம் இடப்பட்ட கட்டடங்களை விரைவில் அகற்றுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நகர வர்த்தகர்கள் சிலரும் குடியிருப்பாளர்களும் பாடசாலை நிர்வாகத்தினரும்; ஏற்று, கட்டங்களை அகற்றி வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.  

ஏறாவூர் நகரை ஊடறுக்கும் கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலை, தற்போதிருக்கும் அளவிலிருந்து சரியாக ஓர் அடி உயர்த்தப்படவுள்ளது.

நெடுஞ்சாலையின் மத்தியிலிருந்து வலதுகரை 11.5 மீற்றர் அகலத்திலும் இடதுகரை 11.5 மீற்றர் அகலத்திலும்; 4 வழித்தடங்களுடன், இருபக்க நடைபாதைகள் மற்றும் இருபக்க வடிகான்களைக் கொண்டதாகவும் மத்தியில் மின் விநியோகக் கம்பங்களைக் கொண்டதாவும் புதிய கார்ப்பட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளது.

இந்த வீதியைப் புனரமைக்கும் திட்டத்துக்குள் 607 கடைகளும் 347 வீடுகளும் 187 வெற்றுக்காணிகளும் பாதிக்கப்படுகின்றன என, உரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X