2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

ஐ. நா. அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

Janu   / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட , இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவுஸ்சா குபோட்டாவிற்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .

இதன்போது  மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும்  செயற்திட்டங்களான ஐந்தாண்டு திட்டம் மற்றும் வீடமைப்பு திட்டங்கள்  தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது .

இதன் போது மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதிக்கு  பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமாரினால் அளிக்கை செய்யப்பட்டது.

மேலும் காலநிலை மாற்றத்தினால் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பு, களப்பினை தூர்வார்தல், பாடசாலையில் மாணவர் இடைவிலகள், சிறு குளங்களை புணரமைத்தல்,விவசாயிகளுக்கான நெல் உலர்த்தும் இயந்திரத்தின் தேவை மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில்  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினிஸ்ரீகாந், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட நிபுணர் கே.பார்த்திபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவநீதன், ரி.நிர்மலராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .