2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஐந்து வர்த்தக நிலையங்களில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள ஐந்து வர்த்தக நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை  திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸாவியா வீதி மற்றும் ஊர் வீதியில் அமைந்துள்ள இந்த வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளன. ஒரு பலசரக்குக்கடை, இனிப்புப்பண்ட விற்பனை நிலையம், இரண்டு புடைவை விற்பனை நிலையங்கள், ஒரு காலணி விற்பனை நிலையம் ஆகியவற்றிலேயே  திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வர்த்தக நிலையங்களிலிருந்து பணமும் பொருட்களும் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் வர்த்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X