2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஒப்பந்தம் கைச்சாத்து

Princiya Dixci   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இலவசமாக மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாலைத்தீவின் Renewable energy Maldives  நிறுவனத்துடன் ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன், திங்கட்கிழமை ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாலைதீவின் Renewable energy Maldives நிறுவனத்தின் தலைவர் இப்ராஹீம் நஸீட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பிரதேசங்களை இணங்கண்டு, அங்குள்ள வீடுகளுக்கு இலசவமாக சூரிய மின்கலங்களை வழங்கப்படவுள்ளதுடன், சூரிய மின்கலங்கள் பொறுத்தப்படும் சிறிய வீடுகளுக்கு 1,500 ரூபாயும், பெரிய வீடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும் மாதாந்த வாடகையும் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X