Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலையில் குளவிக் கொட்டுக்குள்ளான 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்தத் திருவிழாவுக்குச்; திங்கட்கிழமை (16) சென்ற பக்தர்களே குளவிக் கொட்டுக்குள்ளாகினர்.
இவர்கள் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர்; மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கோவில்த் திருவிழாவுக்கு கிரான், சந்திவெளி, திகிலிவெட்டை, கோராவெளி, பெண்டுகல்சேனை, முறக்கொட்டாஞ்சேனை ஆகிய கிராமங்களிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கமாகும்.
6 minute ago
14 minute ago
30 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
30 minute ago
33 minute ago