2025 மே 10, சனிக்கிழமை

காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் முதலாம் ஆண்டுக்கு 750 புதிய மாணவர்கள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் இவ்வருடம் முதலாம் ஆண்டுக்கு 750 புதிய மாணவர்கள் 25 பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் 16,000 மாணவர்கள்  கல்வி கற்கின்றனர். இவர்களில் 13,000 மாணவர்களுக்கு மாத்திரமே  கதிரை, மேசைகள்  உள்ளன. ஏனைய 3,000 மாணவர்களுக்கும் தளபாட வசதிகள் இல்லை எனவும் அவர் கூறினார்.

வருடாந்தம் மாணவர்களுக்கான கதிரை, மேசைகள் கிடைப்பதில்லை. சில தேசியப் பாடசாலைகளுக்கு மாத்திரமே குறிப்பிட்டளவு  தளபாடங்கள் கிடைக்கின்றன. இதனால் மாணவர்களும் பாடசாலைகளின் நிர்வாகத்தினரும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X